Books / Thirumurai 6

84. 6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்

6.92.1

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை௿
முதுபிணக்கா டுடையானை முதலா னானை௿
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை௿
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்௿
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்௿
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்௿
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.92.1

6.92.2

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்௿
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்௿
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்௿
சுடருருவில் என்பறாக் கோலத் தானை௿
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை௿
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்௿
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.92.2

6.92 — note

இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ௿ ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின. ௿ இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்,௿ தேவியார் - பெண்ணினல்லாளம்மை.௿ ௿